சதுரகிரியில் காட்டுத்தீ அணைப்பு

சதுரகிரியில் காட்டுத்தீயை 30 மணி நேரம் போராடி அணைத்தனர்.

Update: 2023-07-19 19:22 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 17-ந் தேதியன்று சதுரகிரி மலையில் 5-வது பீட் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்று காரணமாக கடந்த 2 நாட்களாக தீ எரிந்துக்கொண்டு இருந்தது. சாப்டூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்