சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி சென்றனர்.

Update: 2023-07-11 22:33 GMT


விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுதந்திரகிளாரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். சங்க மாவட்ட பொருளாளர் எஸ்தர் நன்றி கூறினார். விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தொடங்கிய பேரணி தேசபந்து திடலில் நிறைவடைந்தது. முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதி படி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு சமைப்பதற்கு தேவையான சமையல் கியாஸ் சிலிண்டர் செலவினத்தை முழுமையாக அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்