மீனவர் மாயம்

மீனவர் மாயம்

Update: 2022-05-29 16:51 GMT

நாகூர்:

தூத்துக்குடி கிரேஸ்புரத்தை சேர்ந்தவர் தேசய்யா (வயது51). இவர் நாகூர் பட்டினச்சேரியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு உதவியாக தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த பேச்சிமுத்து (26) என்பவரை கடந்த 17-ந்தேதி நாகூருக்கு அழைத்து வந்தார். அங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த பேச்சிமுத்து கடந்த 20-ந்தேதி திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேசய்யா நாகூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்