பேரிடர் கால நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை

ஜெயங்கொண்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.

Update: 2022-10-13 20:11 GMT

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை முன்னிலை வகித்தார். மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது, தீயில் சிக்கிக் கொள்பவர்களை மாடி வீடுகளிலிருந்து கீழே இறக்குவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது மற்றும் எண்ணெயினால் ஏற்படும் தீயை தண்ணீரை ஊற்றி அணைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தீப்பிடித்தால் தீயை அணைப்பது எவ்வாறு என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்