தொழிற்சாலைகளில் தீ தடுப்பு ஒத்திகை

தொழிற்சாலைகளில் தீ தடுப்பு ஒத்திகை

Update: 2023-07-23 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது எப்படி?, தீ விபத்து ஏற்பட்ட உடன் செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?, அதை தைரியத்துடன் எதிர்கொள்ளும் விதம் என்ன? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்