பெட்டிக்கடையில் தீ

பெட்டிக்கடையில் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-07-25 20:28 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள நிராத்தி லிங்கம் என்பவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் கடையை பூட்டிவிட்டு தூங்க சென்றார். அப்போது திடீரென கடையின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே தண்ணீரை ஊற்றி அதை அணைத்து விட்டார். கடையின் முன்பு மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாகவும், இதனால் கடையில் தீவிபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்