ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-05 18:45 GMT

விருதுநகர் தேசபந்து திடலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைத்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசு ஊழியர் சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, உடற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் குணசேகரன், முத்தையா, கருப்பையா, வைரமுத்து, பிச்சை ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி காந்திராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்