கூட்டுறவு வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவு வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-11 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அருகே உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு வங்கிகளுக்கு சென்ற பொழுது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்க மறுக்கின்றனர். கடன் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரு சில விவசாயிகள் எடுத்துச் செல்லும் பொழுது வங்கிகளில் வாங்க மறுக்கின்றனர் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இந்த நோட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொண்டு பிறகு சென்று கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்தும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற உத்தரவை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்