புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம்

புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-21 20:18 GMT

திருவையாறு பகுதியில் விளை நிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 102-வது நாளாக நீடித்தது. இதையொட்டி கண்டியூரில் போராட்டக்குழு தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் விவசாயிகள் நூதன முறையில் யாகம் வளர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகளுக்கு நல்ல அறிவு, நல்ல எண்ணம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு புறவழிச்சாலை தொடர்பாக அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று வேண்டி இவ்வாறு யாகம் வளர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்