கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-28 19:11 GMT

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைபெற நடப்பு கல்வி ஆண்டில் 31.5.2022-க்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை 30.6.2022 வரை நீட்டித்து தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எனவே நலவாரிய உறுப்பினர்கள் இம்மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்