தொ.ஜேடர்பாளையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Update: 2023-05-27 18:45 GMT

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொ.ஜேடர்பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவித்தொகை வழங்கியபோதும், தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.

மேலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தது, 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியின்போது தேசியக்கொடியை ஏற்றி வைத்தது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கியது உள்பட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் அந்த புகைப்பட கண்காட்சியில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

இந்த கண்காட்சியை தொ.ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்