குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி

Update: 2023-07-30 19:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

ஆனால் கடந்த மே மாதம் வறட்சி காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதன்பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், தண்ணீர் வரத்து ஆரம்பித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்த அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால், நேற்று முன்தினம் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் விடுமுறை நாளான நேற்று குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்