வாகனம் மோதி முதியவர் பலி

கம்மாபுரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்.

Update: 2023-09-20 19:39 GMT

கம்மாபுரம், 

கம்மாபுரம் அடுத்த சு.கீணனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 65). இவர் நேற்று காலை அதே பகுதியில் விருத்தாசலம்-கம்மாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வராசு மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்