டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது

திருமணம் செய்வதாக மாணவியை ஏமாற்றிய டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-05-21 22:09 GMT

முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே காத்தப்புரம் அரிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுமேஷ் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் 17 வயதான கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுமேஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்