மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வெப்ப சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாகை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.