மகளிர் உரிமைத்தொகை உதவி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வாலாஜாவில் மகளிர் உரிமைத்தொகை உதவி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-20 17:49 GMT

வாலாஜாபேட்டை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையத்தை ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், கலெக்டர் வளர்மதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உதவி மையத்தில் காத்திருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் அவர்களுக்கான குறைகளை கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தாசில்தார்கள் வெங்கடேசன், ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்