மாவட்ட அளவிலான கபடி போட்டி

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

Update: 2023-01-22 18:30 GMT

தோகைமலையில் உள்ள கருப்பகோவில் தெரு விளையாட்டு மைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 44 அணிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல் பரிசை அழகனாம்பட்டி ராஜ் நினைவு கபடி அணியும், 2-வது பரிசை குளித்தலை குட்டப்பட்டி குட்லக் கபடி அணியும், 3-வது பரிசை கம்புலிநாயக்கன்பட்டி ரன்னிங் கிளப் கபடி அணியும், 4-வது பரிசை மணச்சணம்பட்டி சரவணன் பிரதர்ஸ் கபடி அணியும் பெற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு, சுழற்கோப்பையும், கால் இறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு சிறப்பு பரிசுகளும், சிறந்த அணிகள், சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்