பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி

பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி

Update: 2023-07-26 18:45 GMT

நாகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமை தாங்கினார். பேரிடர் காலங்களில் கையில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுவது. இக்கட்டான சூழ்நிலையில் உயிர் சேதம் இன்றி தகுந்த நேரத்தில் சென்று உயிர்களை எப்படி காப்பாற்றுவது. மீட்பு கருவியினை திறமையாக எப்படி கையாள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாகை- மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த நாகை, கீழ்வேளூர், தரங்கம்பாடி, மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்