திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே ரேஷன் பொருட்கள் கடத்தல் - 3 பேர் கைது
ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக லாரியின் ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டு சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அதில் ரேஷன் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியில் கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ துவரம் பருப்பு, 150 கிலோ கோதுமை ஆகியவற்றை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாரியின் ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.