தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு

எந்தெந்த மதுபானங்கள் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள போர்டு அமைக்கப்ட்டுள்ளது

Update: 2023-08-18 11:13 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 238 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 'டாஸ்மாக்' கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளில் டாஸ்மாக் நிர்வாகம் கவனம் செலுத்தி உள்ளது. அதன்படி மதுபானங்கள் எவ்வளவு விலை என்பது தெரியும் வகையில் 'டிஜிட்டல் ' போர்டுகள் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி மதுகுடிப்போர் மதுபானங்களின் விலையை அறிந்துகொள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மதுபானங்கள் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள போர்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு 5 கடைகள் என முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு  நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்