கிணற்றில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

Update: 2022-12-23 18:45 GMT

காரிமங்கலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 65). தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லேசாக மண் சரிந்து விழுந்தது. இதனால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் ராஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்