சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-09-10 19:25 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்களை மலையேற அனுமதித்தனர். ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து நடைபெற்ற பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்