சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

Update: 2022-05-24 18:51 GMT

வத்திராயிருப்பு, 

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

5 நாட்கள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

குளிக்க தடை

அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதி அளிக்கப்படாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்