சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி அளிக்கப்படுகிறது.

Update: 2023-06-12 19:58 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் ஆனி மாத அமாவாசைக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி வழங்கப்படவில்லை.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்