பக்தர்கள் சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

பங்குனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-31 20:20 GMT

வத்திராயிருப்பு, 

பங்குனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதோஷ வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்க அனுமதி இல்லை

மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

தற்போது கோடைக்காலம் என்பதால் மலைப்பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்