சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமியையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-01 18:50 GMT

வத்திராயிருப்பு, 

மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமியையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாமி தரிசனம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது.

அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்பாடு

மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்