ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

Update: 2022-07-13 17:57 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே காட்டுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பவுல்சத்தியராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் கொடியினை ஒன்றிய பொருளாளர் சாமித்துரை ஏற்றி வைத்தார். ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை சங்கத்தின் மாவட்ட தலைவர் அறிவழகன் தொடங்கி வைத்தார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தரங்கம்பாடி-மயிலாடுதுறை இடையிலான ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த கிராமப்புற சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய துணை செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்