மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு

மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தார்.

Update: 2023-10-09 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள சொம்பேகவுண்டன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சொம்பே கவுடா. இவருடைய மனைவி பசம்மா (வயது 73). இவருடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் மின்கம்பி அறுந்து வேலி மீது விழுந்து கிடந்தது. இதை அறியாமல் பசம்மா துணியை துவைத்து வேலியில் காய வைத்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்