பர்கூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

பர்கூர் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-09-21 19:30 GMT

பர்கூர்:

பர்கூர் அருகே உள்ள ஆத்துமேடு பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் ரமேஷ் (வயது 21). இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கந்திகுப்பம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் தவறி விழுந்து பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்