சூளகிரி அருகேகொதிகலனில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

சூளகிரி அருகே கொதிகலனில் சிக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-14 19:30 GMT

சூளகிரி:

ஒடிசா மாநிலம் பாலந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் கஜராஜதங்கூர் (வயது 38). இவர் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள ஒரு பேப்பர் மில் குடியிருப்பில் தங்கி மில்லில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10-ந் தேதி பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது கொதிகலனில் இருந்து வெளியேறிய அனல் காற்றுடன கூடிய தீயில் கஜராஜதங்கூர் சிக்கி பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கஜராஜதங்கூர் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்