கொரோனா ஊரடங்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

கொரோனா ஊரடங்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-24 18:45 GMT

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா ஊரடங்கு நினைவேந்தல் நடைபெற்றது. இதற்கு தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இ.எஸ்.ஐ. வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கொரோனாவால் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பாரத தாய் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்