2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: இலக்கிய அணி மாநில தலைவர் பேட்டி

Update: 2023-09-05 18:45 GMT


மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் இலக்கிய அணி மாநில தலைவர் புத்தன், நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை உள்பட விலைவாசி உயர்வாலும், வேலை இல்லா திண்டாட்டத்தாலும் மக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர். ரூ.480-க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதில் ரூ.200 குறைத்து மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்ற பார்க்கிறது. மக்கள் அதனை கண்டு ஏமாற மாட்டார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தில் ராகுல்காந்தி தொடங்கிய நடைபயணம் மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. நாளை (வியாழக்கிழமை) ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கி ஓராண்டு ஆவதை நினைவுபடுத்தும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபயணம் மேற்கொள்ள கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் இலக்கிய அணியினர் திரளாக கலந்துகொள்வோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார். உடன் இலக்கிய அணி மாநில பொதுச்செயலாளர் கவிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்