ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் - கே.எஸ்.அழகிரி பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-19 08:14 GMT

சென்னை,

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தான் கட்சி போட்டியிடும். ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி. நாங்கள் நின்று வென்ற தொகுதி. கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பதை 3 நாட்களில் அறிவிக்க உள்ளோம்.

தி.மு.க., ம.தி.மு.க.. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுவுடைமை கட்சி தலைவர்களை இன்று மாலை முதல் சந்திக்க உள்ளோம். அனைத்து கூட்டணி கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிக்கு அவர்கள் ஆதரவை கோர இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்