தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-05-23 20:48 GMT

தாமரைக்குளம்:


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஷர்வானிகா என்ற மாணவி, ஒடிசாவில் நடைபெற்ற 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 10-வது தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதற்கான கோப்பை மற்றும் பரிசுத்தொகையை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், இம்மாணவி இப்போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை ஏற்கனவே இம்மாணவியின் தந்தையிடம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்