புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-27 18:18 GMT

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் சாலையில் இயக்க முடிவதில்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரன், கமுதி.

வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அருகே ஆய்க்குடியில் தெருநாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையின் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஆல்பிரட், ராமநாதபுரம்.

பக்தர்கள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவிலில் அமைந்துள்ள மாதவன மகா காளியம்மன் கோவில் குளம் தூர்வாரப்படாத நிலையில் படித்துறைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோவில் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேணுகோபால், நயினார்கோவில்.

புதிய பள்ளி கட்டிடம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சம்பூரணி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளிகட்டிடம் சேதமடைந்த நிலையில் மேற்கூரை இடிந்த வண்ணம் உள்ளது. மழைக்காலத்தில் நீரானது பள்ளிக்குள் புகுந்துவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பள்ளிகட்டிடத்தை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேத்யூடி ஜான், திருவாடானை.

மாணவர்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சடையனேரி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

கிறிஸ்டோபர், முதுகுளத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்