இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு

திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்தது.

Update: 2022-06-07 17:14 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினா் செல்வராசு எம்.பி., மாவட்ட செயலாளர் சம்பந்தம், ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூண்டியில் கீரனேரியை தூர்வார வேண்டும். கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், விதை,பூச்சி மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்