கல்லூரி மாணவி மாயம்

விழுப்புரத்தில் கல்லூரி மாணவி மாயம்

Update: 2023-05-21 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் இஸ்டர்உசேன் மகள் அசிலா (வயது 20). விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அசிலாவை காணாததால் இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்