கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயமானார்.

Update: 2022-12-02 19:27 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மகள் உமாபாரதி(19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி காலை 11 மணி அளவில் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது தந்தை செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்