கல்லூரி மாணவர் மர்ம சாவு

கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2022-09-03 18:08 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் கோகுல் (வயது 22). திண்டிவனம் தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்தார். இவர் முன்னூர் கோவில் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் மாணவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்