நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

Update: 2023-05-29 19:00 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 286 மனுக்களை பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தீ விபத்தில் வீடு இழந்த பரமத்திவேலூர் தாலுகா திடுமலை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு ரெட்கிராஸ் சார்பில் சமையல் பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை, கம்பளி, கொசுவலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.840 மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோலும், ரூ.2,780 மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாற்றுத்திறனாளிக்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் என 3 பேருக்கு ரூ.3,620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்