சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2023-10-05 18:45 GMT

விருதுநகர்

தொழிலாளர் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மகாலட்சுமி பேசினார். மாவட்ட செயலாளர் தேவா கண்டன உரையாற்றினார்.

மேலும் இதில், மாநில செயலாளர் அசோகன், மாவட்ட நிர்வாகிகள் வேலுச்சாமி, ராமர், சாராள், பாண்டியன், விஜயகுமார், திருமலை, கார்மேகம், மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்