செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.!
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.