செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.!

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-08 18:26 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்