சேலம் வழியாக செல்லும் கோவை-சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்

சேலம் வழியாக செல்லும் கோவை- சில்சார் எக்ஸ்பிரஸ் ெ்ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-05-21 21:38 GMT

சூரமங்கலம்:

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சேலம் வழியாக அசாம் மாநிலம் சில்சார் செல்லும் ரெயிலின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை- சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12515) இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29-ந் தேதி, மேலும் வருகிற ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கவுகாத்தி வரை செல்லும், இந்த ரெயில் கவுகாத்தி- சில்சார் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது,

இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் சில்சார்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12516) நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 31-ந் தேதி, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சில்சார்- கவுகாத்தி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, இந்த ரெயில் கவுகாத்தி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்றடையும்.

மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்