மேஸ்திரியிடம் செல்போன், இருசக்கர வாகனம் பறிப்பு

செங்கம் அருகே மேஸ்திரியிடம் சொல்போன், இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-09-29 18:09 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 32), மேஸ்திரி. இவர், புதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

செல்போனுக்கு அழைப்பு வரவே, இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் செல்வத்திடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்