பாஜக கொடிக்கு தீ வைப்பு - தென்காசியில் பரபரப்பு

கடையம் அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-11 04:49 GMT

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லப்பிள்ளையார்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக கொடி கம்பத்தில் இருந்து, கொடியை கீழே இறக்கி மர்ம நபர்கள், தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர். ஏற்கனவே, இதே கிராமத்தில், இவருர் மது போதையில் பாஜகவின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய நிலையில், தற்போது கொடிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்