வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-04-12 09:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சேத்துப்பட்டில் படப்பை அடுத்த சேத்துப்பட்டு சபரி நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் உமா சங்கர் (வயது 40). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் நாவலூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்