குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

Update: 2023-07-23 19:36 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பை சரி செய்ய வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வயல்களில் உரமிடும், உழும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உழும் பணியில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் கூறினர். எனவே வயல்களுக்குள் குழாய் மூலமாக தண்ணீர் செல்வதை தடுக்கவும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்