கோவிலில் குதிரை சிலை உடைப்பு

கோவிலில் குதிரை சிலை உடைக்கப்பட்டது.

Update: 2022-07-28 22:30 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலைப்பட்டியை அடுத்துள்ள பொன்னேரிபுரத்தில் எல்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

இந்நிலையில் கோவிலில் கருப்புசாமியின் முன்பு 2 குதிரை சிலைகள் இருந்தன. அதில் ஒரு குதிரை சிலையை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, குதிரை சிலையை உடைத்தது யார்? என்று தெரியவில்லை. வேண்டுமென்றே செய்த செயலாக இன்றி, தவறி கூட விழுந்திருக்கலாம். அந்த இடத்தில் புதிய சிலை வைக்கப்படும், என்று கூறினர். இது குறித்து பொன்மலை போலீசாரிடம் கேட்டபோது சிலையை உடைத்தது சம்பந்தமாக இதுவரை எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. புகார் அளிக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்