பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருமருகல் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2023-04-20 18:45 GMT

திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேலும் தவிர்க்க வேண்டிய பிளாஸ்டிக் பொருள்கள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் மற்றும் கணித பட்டதாாி ஆசிரியர் சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்