சிறப்பாக செயல்பட்ட மகளிர் சமுதாய அமைப்புகளுக்கு விருதுடன் ரொக்க பரிசு கலெக்டர் வழங்கினார்

சிறப்பாக செயல்பட்ட மகளிர் சமுதாய அமைப்புகளுக்கு விருதுடன் ரொக்க பரிசை கலெக்டர் வழங்கினார்

Update: 2023-04-04 18:45 GMT

சிவகங்கை 

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 367 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.4,90,000 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அத்துடன் 2021-2022-ம் ஆண்டில் மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்கிட தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 சமுதாய அமைப்புகளுக்கு விருதும் ரூ.4 லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். மேலும் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையா் (கலால்) ரத்தினவேல், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்